எனது சித்திரக் கவிதைகள் இடம்பெற்ற புத்தகம். 'கவிதையில் சித்திர விசித்திரங்கள்'. திரு இலந்தை ஐயா அவர்களுக்கு நன்றி!
ஆண்டு: 2018
உலகமுதல் சித்திரக் கவியரங்காம்
உன்னதமாய்ச் சந்தவ சந்தத்திலே
அலைகடலில் முத்தா டியோரருகேக்
கரையோரம் நீந்தியோன் பாக்களிங்கே...
உன்னதமாய்ச் சந்தவ சந்தத்திலே
அலைகடலில் முத்தா டியோரருகேக்
கரையோரம் நீந்தியோன் பாக்களிங்கே...
1.
நாற்கால் கோபுர பந்தம்
வஞ்சித்துறை
உந்தனருள்தா
மைந்தனருந்த
சந்தவசந்த
நந்தவனத்தே
பந்தமிணைத்தே
செந்தமிழாற்ற
சிந்தனையேற்ற
வந்தனைகந்தா
2.
கோமூத்திரி
வண்ணத்துப்பூச்சி
நினைப்பு
கிண்ணத்துப்பச்சை
நிறப்பூ
3.
சிவலிங்க பந்தம்
பல விகற்ப
இன்னிசை வெண்பா
கருவுமாகி
மெய்யுமாகு கோலங் களேயறவு
ணர்த்தவ
மென்னைநா டீமா வினைய
கலவொ ருவரமே
கொண்டேன்பா லன்சீலன்
வேலவனை
நான்வணங் கி
விரிவாக:
கருவாகி
உடலாகும் கோலங்கள் அற உணரும் தவம் என்னை நாடியே மாவினை அகல ஒரு வரமே கொண்டேன் பாலன்
சீலன் வேலவனை நான் வணங்கி
... மீ.மணிகண்டன்
Feb-28-2018
Feb-28-2018