செவ்வாய், 7 ஏப்ரல், 2015

அவர்களுக்கும் காதல் ... M.Manikandan

பூப்பாதக் கொலுசின்
மணியாக வில்லையாம்
கரைந்து போனது
புல் நுனிப் பனித்துளிகள்
*
அடர் கூந்தலுடன்
நட்பு பேண
விழுது வளர்த்தது ஆலம்
*
அந்திப் பூ
செவ்வந்தியானது
அவளுதட்டு முத்தத்தால்
*
அவளின் கரம்பட்ட
அரளிக்கும் காதல்
உள்ளங்கை ரேகை போல
வேர்கள்
*
குடந்தாங்கும்
இடை தாவ முடியாமல்
கொவ்வை கோபத்தைக்
கொப்பளித்தது கனியாய்
*

By M.Manikandan
07-Apr-15