அந்த மூவரையும்
காணவில்லையே
விஞ்ஞானம்
வளர்ந்துவிட்டதாம்
விரல் பதிவுகளில்
பள்ளிக்கூடங்களுக்குள்ளேயே
போர்வைகள்
விலகுகின்றன
மொழிச்
சுதந்திரம்
முதிர்ந்து
விட்டதாம்
மூச்சிரைக்க
முழங்கப் படுகிறது
முனகல்ச்சத்ததின்
பரிணாமங்கள்
முளைக்கட்டுக்
கூடங்களிலேயே
கேள்வி ஞானம்
கிளைத்து
விட்டதாம்
சேர்க்கை
சரிதங்கள்
செதாரமறக் கேட்டு
ரசிக்கப்படுகிறது
எழுத்தறிவுச்
சாலையிலேயே
வயது முதிர்ந்ததோ
வறுமை
முறித்ததோ
அழத்
தோன்றுகிறது
அழகு மந்திகளைத்
தேடித் தாருங்களேன்
by M.Manikandan
11-Mar-15