புதன், 6 மே, 2015

ஆழியிலே ... M.Manikandan

ஆழியிலே முத்தெடுக்க
  ஆசையுடன் நான்விரைந்தேன்
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
  அனுதினமும் உருக்குலைந்தேன்
 நாழிகைகள் நாட்களாக
  நாட்களுமே மாதமாக
நாற்புறமும் தேடுகிறேன்
  நடந்துசெல்லப் பாதையில்லை
நீந்துவது(உ) பாயமதை 
  நேசித்துக் கற்கவில்லை
நீர்முகந்து வழிசமைக்க
  நீலக்கடல் விடுவதில்லை
காய்ச்சீரில் கவியெழுதி
  கவலைதனை மறந்திடவோ 
கார்திகேயன் அருளையெண்ணி
   காலமிதைக் கடந்திடவோ

--மீ.மணிகண்டன்

06-May-15