திங்கள், 26 மே, 2014

பெற்றோர்க்குச் சொல்ல வந்தேன் ... M.Manikandan

ஒன்று சொல்லத் தோன்றியதால்
உரைக்க வந்தேங்க‌
நன்று என்றே தோன்றியதால்
நவில வந்தேங்க‌

வென்று வாழும் வாழ்கையது
தேர்வி லில்லீங்க‌
வெள்ளைத் தாள் மதிப்பெண்வெறும்
பார்வை தானுங்க‌

தேர்வெழுதித் தோற்பதொன்றும்
தீர்வு இல்லீங்க‌
தெரிந்து கொண்ட அனுபவமே
தொடர்ந்து வெல்லுங்க‌

தோற்றதனால் பிள்ளைகளை
வெறுப்ப தேனுங்க‌
தோள்கொடுத்து ஊக்கமதை
ஊட்டிப் பாருங்க‌

மறுபடியும் கிளைத்தெழவே
மலர்சி யூட்டுங்க‌
மனமுணர்ந்த மக்களிடம்
மாற்றம் காணுங்க‌

உயர் மதிப்பெண் பெற்றவரும்
உலர்ந்த துவுண்டு
உலர் மதிப்பெண் பெற்றவரும்
உயர்ந்த துவுண்டு

மதிப்பெண் ஒன்றே வாழ்வுயர்த்த‌
மாயையு மில்லை
மதிப்பெண்ணிழந்த காரணமாய்
வீழ்வது மில்லை

எத்தனையோ சாதனைகள்
இன்னும் இருக்க‌
இன்று சின்ன‌ தோல்விக்காக‌
இறுக்க மேனுங்க‌

இன்றிழந்தால் இன்னுமுண்டு
தேர்வு வாய்ப்புங்க‌
இப்படித்தான் வாழ்கையென்று
எழுந்து காட்டுங்க

முன்கோபம் வெறும் உணர்வே
மூட்டை கட்டுங்க‌
முயர்சியினால் முட்டிஎழும்
விதையைக் காட்டுங்க‌

சாதனையின் கதவுகளைச்
சாத்திடா தீங்க‌
சரித்திரமாய் வாழவழி
காட்டி நில்லுங்க !


by M.Manikandan

வெள்ளி, 16 மே, 2014

நேற்றால் இன்று ... M.Manikandan

நாளை என்றொரு
நம்பிக்கை இன்றேல்
நாளும் வாழ்கை
எவ்விதம் நகரும் ?
மாற்றம் இதுவென
மனதில் தோன்ற
மருந்தொன் றுண்டு
என்றே இருந்தால் !

உனக்கதைச் செய்வேன்
எனக்கிதைச் செய்வாய்
உத்திர வாதம்
கையெழு த்தாகும்
உன்கதை என்கதை
செய்தவ னிருக்க
ஊடேயொப் புதல்
செய்திட லாமோ ?

நடப்பது யாவும்
நடத்திய தாலே
நடப்பதை யுணர
முயன்றவ ராரோ
நாளை எதுவென்
றறிந்திடு வாரே
நாளும் நடப்பைப்
பார்த்தி ருப்பாரே !

by M.Manikandan

குரு வாழ்க

குரு வாழ்க - M.Manikandan

குருவாழ்க குருவாழ்க குருவாழ்கவே !
குணம்வாழ குலம்வாழ குருவாழ்கவே !

தருவாகத் தரவந்த திருவாழ்கவே !
தலந்தந்து தனந்தந்த திருவாழ்கவே !

கரஞ்சேர்த்துக் கரைசேர்த்துக் கலமாகினாய்
கடந்தீர்த்துக் கனியீந்துக் காப்பகினாய்

அரணான‌ அன்னைனின் அருளாசியால்
அடிபோற்றும் அடியேனை உடனாக்கியே

எப்போதும் உன்னோடு நானாகவே
எனதான எந்தைனின் எழில்வாழ்கவே !

வளம்வாழ்க நலம்வாழ்க குருவாழ்கவே
வணங்கித் தொழுவேன்னின் தாள்வாழ்கவே !

ஆக்கம்: மீ.மணிகண்டன்


வியாழன், 1 மே, 2014

ஏமாளிப் போராளி

நானொரு தொழிலாளி
நலந்தரப் பொறுப்பாளி
நானிலம் சீருயர‌
நனைந்திடும் பணியாளி !

பேச்சில் ஊக்குவிக்கப்
பெரியோ ர‌ருகுண்டு
பெரும்பே ர‌துபோதும்
பெறுங்கணக் கேனிங்கு.

பகலாய் இரவாகும்
பணியின் தரமுயர
பாராட் டுப்போதும்
பலநாள் பணியுயர‌.

நால்வர் குடியுயர‌
நானோ கடனாளி
நா நயம் நிசமென்னும்
நாணயப் பாட்டளி !

வார்த்தை வாழ்த்துக்களால்
வளங்கள் உயருமென‌
வர்த்தக உலகியலில்
வாழ்கைப் போராளி !


by M.Manikandan