கனவு ஆசிரியர் இதழில் எனது சிறுகதை 'பொருட்காட்சி' (எக்ஸிபிஷன்)
கதையின் தலைப்பு: பொருட்காட்சி
பதிவான இதழ்: கனவு ஆசிரியர்
பதிவான மாதம்: செப்டம்பர் 2024
பதிவான இதழ்: கனவு ஆசிரியர்
பதிவான மாதம்: செப்டம்பர் 2024
நான் எதிர்பாராமலேயே எனக்கொரு பரிசு கிடைத்திருக்கின்றது. பரிசு கொடுத்தவர் திரு யெஸ். பாலபாரதி அவர்கள். என் மனம்நிறைந்த மகிழ்ச்சியோடு அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக ‘கனவு ஆசிரியர்’ என்ற மாத இதழ் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்படுகிறது என்பது நிறையப்பேருக்குத் தெரிந்திருக்கும். இம்மாத (செப்) 'கனவு ஆசிரியர்' இதழில் அடியேனின் சிறுகதை.
இதழில், கதை ஆசிரியர் குறிப்பில், அவர்கள் குறிப்பிட்டிருக்கும் 'இலக்கியத்தடத்தில் கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறது' என்ற வாசகத்தை வாசிக்கும்போது உண்டாகும் என் உள்ளப்பூரிப்பை விவரிக்க வார்த்தைகள் ஏது?
கனவு ஆசிரியரின் ஆசிரியருக்கு மீண்டும் என் நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக