இரு கரைகளுக்கிடையே
இணங்கிப்புகும் நதியாகத்
தவழ்ந்துவா
மலர்ச் சோலைக்குள்
ஆடிவரும் புது மணமாகத்
திகழ்ந்துவா
நிலவில் மயக்கவரும்
அல்லியாய் முகிழ்ந்து வா
அள்ளி முத்தமிடும்
அன்னையாய்
அன்பைக் குழைத்து வா
மௌனக் கடலில் முளைக்கும்
மஞ்சள் கதிராக
உதித்துவா
உல்லாசமாகச் சிறகுவிரிக்கும்
புள்ளினமாகி
எம்மை உயர்த்த வா
குட்டி முயல் போலக்
குதித்து விளையாடி வா
விளைந்த கரும்பாகி
வேர்வரை இனித்து வா
எல்லா வளங்களையும்
எடுத்து நல்கும்
இயற்கையாக
இணைந்து வா எம்மோடு
எழுந்து வா கைகோர்த்து
நீ புது ஆண்டு
மலரச்செய் நலம் தந்து
மகிழச்செய் வளம் தந்து
...மீ.மணிகண்டன்
12/31/2025





















