வியாழன், 5 ஜூன், 2014

கழிவு நீர்க் கடையாலே

எங்க சாமி மனுக் கொடுக்க
எங்க வாழ்கை தொலஞ்சு போச்சு
ஏச்சுப் பொழைக்கும் இனங்க ளுக்கெ
ஏக கால மாகிப் போச்சு

தாலி தந்த கணவனிங்கே
தவிச்ச வாய்க்கு தண்ணிதல்ல‌
கூலி செஞ்ச காசையெல்லாம்
குடும்பத்துக்குத் தருவதில்ல‌

வருத்தமில்ல பிள்ளகுட்டி
வளருவதும் கருத்திலில்ல‌
தெருத் தெருவாத் திரிபவன‌
திருத்த வொரு பேருமில்ல‌

பெத்தவளக் கேட்டாக்கப்
பொறுத்திருந்து போகச்சொன்னா
வித்தையில்ல விடியுமுன்னே
விடைதெரிய வென்றுசொன்னா

அவரவர் பழவினைன்னு
ஆடிச்சொன்னர் பூசாரி
வெவரங் கெட்டவ நான்
வேறயென்ன எதிர்பாக்க‌

தரங்கெட்ட அரசாங்கம்
தம்பட்ட மடிச்சுக்குது
தன்னலமே இல்லையிண்ணு
தைரியமாப் புழுகுது

இட்டிலிய சோத்தத் திண்ணா
ஏழ சனம் ஒசந்துடுமா
பட்டியெல்லாம் டாஸ்மாக்
பல்லிளிச்சுக் கொல்லுதம்மா

சாதிவாழும் மண்ணிலே
சமுதாய மத்தியிலே
நாதியத்த சனங்களா
நாங்க‌ளுமே மனுசதான்


by M.Mnaikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக