வெள்ளி, 6 ஜூன், 2014

சுற்றி யாவும் சூட்சுமமே ... M.Manikandan

இலக்கணம் சொன்னது தமிழ்
எழுதுகிறேன்
இனிப்பைச்சொன்னது தேன்
சுவைக்கிறேன்

கவிதை சொன்னது மழை
ரசிக்கிறேன்
கதைகள் சொன்னது பழமை
வியக்கிறேன்

வாசம் சொன்னது பூ
சுகிக்கிறேன்
வண்ணம் சொன்னது வானம்
நம்புகிறேன்

நட்பைச் சொன்னது பறவை
நெகிழ்கிறேன்
நடக்கச் சொன்னது நதி
உழைக்கிறேன்

நேசம் சொன்னது நிலம்
திளைக்கிறேன்
நிசத்தைச் சொன்னது தீ
நிமிர்கிறேன்

மென்மை சொன்னது தென்றல்
லயிக்கிறேன்
மயங்கச் சொன்னது இரவு
உறங்குகிறேன்

சேர்க்கை சொன்னது விலங்கு
சிரிக்கிறேன்
சீற்றம் சொன்னது புயல்
சிந்திக்கிறேன்

மதிக்கச் சொன்னார் முன்னோர்
வணங்குகிறேன்
உதிக்கச் சொன்னான் சூரியன்
வாழ்கிறேன்

by M.Manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக