Title given by eluthu.com for a competition
காரிருள் நீக்க வரும்
கதிரவனின் பூக்கதிரை
காதலிக்க வேண்டுமென
கண் விழித்த காலமது... 10
செல்லக் குஞ்சுகளும்
சிணுங்கிக் கொஞ்சலிட
சிறகடித்துக் குருவிகளும்
இரை தேடிப் பறந்ததென்ன... 19
மெல்லப் பனி முத்தும்
மேனி நனைத் திறங்க
புல்லும் குளித்து நிதம்
புதிதாய்ச் சிரித்ததென்னெ... 30
அறம் செய விரும்பென
அன்றைய தேர்வுக்காய்
அதிகாலை மனனிக்கும்
மழலைக் குரலென்ன... 39
நீர் சொட்டும் மயிர் துவட்டி
நீள் கூந்தல் துண்டு டுத்தி
தலை வாசல் தனைப் பெறுக்கி
தண்ணீர் தெளித்தங்கெ
தாமரைக் கோலமிடும்
தாரகையர் கோலமென்ன... 57
ஓடையில் நீச்சலிட
ஓடி வந்து விழுவதென்ன
ஓரிருவர் சத்தமிட
உதட்டை நான் கடித்ததென்ன... 66
இத்தனை சுகங்களையும்
இன்று மீண்டும் தேடுகிறேன்
இருக்கும் இடம் கண்டு
எவரேனும் சொல்வீரோ... 76
புரியாதவன் புலம்புகிறேன்
என்றுவிட்டுப் போவீரோ.... 80
அழுக்குப் பணம் சுமக்க
அழகனைத்தும் தொலைத்துவிட்டேன்
புழுத்தேடிப் புல் மறந்து
புரியாமல் புறப்பட்டேன் 90
நினைவுப் பூக்களுடன்
கை குலுக்கிக் கிடக்கின்றேன்
நிச்சயம் பூவுலகம்
நிசத்தை திருப்பு மென்று. 100
by M.Manikandan
காரிருள் நீக்க வரும்
கதிரவனின் பூக்கதிரை
காதலிக்க வேண்டுமென
கண் விழித்த காலமது... 10
செல்லக் குஞ்சுகளும்
சிணுங்கிக் கொஞ்சலிட
சிறகடித்துக் குருவிகளும்
இரை தேடிப் பறந்ததென்ன... 19
மெல்லப் பனி முத்தும்
மேனி நனைத் திறங்க
புல்லும் குளித்து நிதம்
புதிதாய்ச் சிரித்ததென்னெ... 30
அறம் செய விரும்பென
அன்றைய தேர்வுக்காய்
அதிகாலை மனனிக்கும்
மழலைக் குரலென்ன... 39
நீர் சொட்டும் மயிர் துவட்டி
நீள் கூந்தல் துண்டு டுத்தி
தலை வாசல் தனைப் பெறுக்கி
தண்ணீர் தெளித்தங்கெ
தாமரைக் கோலமிடும்
தாரகையர் கோலமென்ன... 57
ஓடையில் நீச்சலிட
ஓடி வந்து விழுவதென்ன
ஓரிருவர் சத்தமிட
உதட்டை நான் கடித்ததென்ன... 66
இத்தனை சுகங்களையும்
இன்று மீண்டும் தேடுகிறேன்
இருக்கும் இடம் கண்டு
எவரேனும் சொல்வீரோ... 76
புரியாதவன் புலம்புகிறேன்
என்றுவிட்டுப் போவீரோ.... 80
அழுக்குப் பணம் சுமக்க
அழகனைத்தும் தொலைத்துவிட்டேன்
புழுத்தேடிப் புல் மறந்து
புரியாமல் புறப்பட்டேன் 90
நினைவுப் பூக்களுடன்
கை குலுக்கிக் கிடக்கின்றேன்
நிச்சயம் பூவுலகம்
நிசத்தை திருப்பு மென்று. 100
by M.Manikandan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக