வள்ளுவனார் தெள்ளமிழ்தால்
ஈரடி தந்தார்
கள்ளுணர்வாய்க் கோள்ளவெழு
சீரடி தந்தார் !
அள்ளியருந் துள்ளமதை
யாரடி கொண்டார்
பள்ளியோடு மெள்ளமரந்
தாரடி முறையோ ?
வண்ணமிகுத் தோரணையில்
பாரதில் அந்நாள்
பண்ணிறைத்து வந்து தனைப்
“பாரதி” என்றார் !
கண்ணொளியில் வீரகவிக்
காரதைப் பொழிந்தும்
எண்ணமதில் தன்னிறைவாய்
யாரதை ஏற்றார் ?
வெள்ளையுடைத் தாரகையும்
வேண்டிமுன் வந்தார்,
கள்ளமற்ற சேவைதனைக்
கொண்டு கொடுத்தார்,
தள்ளாத முதுமையையும்
தாண்டி நடந்தார்
கொள்ளாமல் தனக்கெதுவும்
தொண்டு புரிந்தார் !
வல்ல குறிக் கோளடையும்
மானுடந் தன்னை,
வெல்லமெனச் சொல்ல விவே
கானந்தர் வந்தார் !
நல்ல றிவாய் உள்ளுறைந்து
ஆனதிரு தீ -அதை
எல்லார்க்கும் வள்ளலாரும்
காண வகுத்தார் !
நாசுக்காய் நல்லவைகள்
தாங்கி யளந்தார்.
நேசிக்கப் புத்தியின்றி
வாங்க விழந்தே
தேசவிதி விளங்காமல்
ஏங்கி நலிந்தே
காசுக்காய் கெட்டழிந்து
தேங்குதல் முறையோ !
by M.Manikandan
ஈரடி தந்தார்
கள்ளுணர்வாய்க் கோள்ளவெழு
சீரடி தந்தார் !
அள்ளியருந் துள்ளமதை
யாரடி கொண்டார்
பள்ளியோடு மெள்ளமரந்
தாரடி முறையோ ?
வண்ணமிகுத் தோரணையில்
பாரதில் அந்நாள்
பண்ணிறைத்து வந்து தனைப்
“பாரதி” என்றார் !
கண்ணொளியில் வீரகவிக்
காரதைப் பொழிந்தும்
எண்ணமதில் தன்னிறைவாய்
யாரதை ஏற்றார் ?
வெள்ளையுடைத் தாரகையும்
வேண்டிமுன் வந்தார்,
கள்ளமற்ற சேவைதனைக்
கொண்டு கொடுத்தார்,
தள்ளாத முதுமையையும்
தாண்டி நடந்தார்
கொள்ளாமல் தனக்கெதுவும்
தொண்டு புரிந்தார் !
வல்ல குறிக் கோளடையும்
மானுடந் தன்னை,
வெல்லமெனச் சொல்ல விவே
கானந்தர் வந்தார் !
நல்ல றிவாய் உள்ளுறைந்து
ஆனதிரு தீ -அதை
எல்லார்க்கும் வள்ளலாரும்
காண வகுத்தார் !
நாசுக்காய் நல்லவைகள்
தாங்கி யளந்தார்.
நேசிக்கப் புத்தியின்றி
வாங்க விழந்தே
தேசவிதி விளங்காமல்
ஏங்கி நலிந்தே
காசுக்காய் கெட்டழிந்து
தேங்குதல் முறையோ !
by M.Manikandan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக