செவ்வாய், 8 ஏப்ரல், 2014

ஆசான்கள் ... M.Manikandan

வள்ளுவனார் தெள்ளமிழ்தால்
    ஈரடி தந்தார்
கள்ளுணர்வாய்க் கோள்ளவெழு
    சீரடி தந்தார் !
அள்ளியருந் துள்ளமதை
    யாரடி கொண்டார்
ப‌ள்ளியோடு மெள்ளமரந்
    தாரடி முறையோ ?

வண்ணமிகுத் தோரணையில்
    பாரதில் அந்நாள்
பண்ணிறைத்து வந்து தனைப்
    “பாரதி” என்றார் !
கண்ணொளியில் வீரகவிக்
    காரதைப் பொழிந்தும்
எண்ணமதில் தன்னிறைவாய்
    யாரதை ஏற்றார் ?

வெள்ளையுடைத் தாரகையும்
    வேண்டிமுன் வந்தார்,
கள்ளமற்ற சேவைதனைக்
    கொண்டு கொடுத்தார்,
தள்ளாத முதுமையையும்
    தாண்டி நடந்தார்
கொள்ளாமல் தனக்கெதுவும்
    தொண்டு புரிந்தார் !

வல்ல குறிக் கோளடையும்
    மானுடந் தன்னை,
வெல்லமெனச் சொல்ல விவே
    கானந்தர் வந்தார் !
நல்ல றிவாய் உள்ளுறைந்து
    ஆனதிரு தீ -அதை
எல்லார்க்கும் வள்ளலாரும்
    காண வகுத்தார் !

நாசுக்காய் நல்லவைகள்
    தாங்கி யளந்தார்.
நேசிக்கப் புத்தியின்றி
    வாங்க விழந்தே
தேசவிதி விளங்காமல்
    ஏங்கி நலிந்தே
காசுக்காய் கெட்டழிந்து
    தேங்குதல் முறையோ !

by M.Manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக