புதன், 2 ஏப்ரல், 2014

தண்ணீர்ப் பயணம் ... M.Manikandan

கருமுகிலில் நீரெடுக்க‌
விருப்பமது பெருகிவிட‌
பருவக்கணக் கறிந்திடா
சிறுகுருவி வென்றகதை !

நிழலுக் குள்ளே நிற்கும்போது
    நீள வுயரம் கணிக்க‌வில்லை
மழலைச் சிறகு விரிந்தபோது
    மலையின் தூரம் கன‌க்கவில்லை !

வழிகள் முழுதும் வலிகள்ளென்றே
    வண்ணக் குருவி அறிய‌வில்லை
விழிகள் தொட்ட தூரம்பெரிதென
    விளங்கிக்கொள்ளத் தெரியவில்லை !

நின்று நிமிர்ந்து பறந்து கொஞ்சம்
    நீளமூச்சு வாங்கித்தான்
ஒன்றி நிழலில் ஓடி மலையில்
    ஒவ்வொரு கல்லாய்த் தாவியது !

ஒற்றை உயிராய்த் தொடங்கிய பயணம்
    பற்றியதொருகண ம‌ச்சம்
பற்றிய லட்சியம் பற்றியவெண்ணம்
    மாற்றிய தச்சம் மறுகணம் !

நிச்சயமென்று நினைவில் நிறுத்தி
    நீண்ட தவமாய் நிலையாக்கி
உச்சியைத் தொட்டு உயரப் பறந்து
    லட்சியம் தொட்ட பயணமிது !

ஒருமனப் பயணம் உயரியவெண்ண‌ம்
    உன்னதமாம் தந்த ஜெயம்
இருந்தும் உண்மையை எண்ணுகையில்
    இயற்கை கொஞ்சம் கடினம் !

Written by M.Manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக