செவ்வாய், 8 ஏப்ரல், 2014

இயற்கை வாழ்க ... M.Manikandan

குட்டிக் குட்டி மழைத்துளிகள்
கொட்டிக் களித்திடும் மேகம் வேண்டும்.
குளுகுளுக் காற்றை எனக்காக‌
கொண்டு வந்திடும் சோலை வேண்டும்.

வனங்கள் உயர்ந்திட வேண்டும்
வரங்கள் வழங்கிட வேண்டும்
மனங்கள் செழித்திட வேண்டும்
மரங்கள் வாழ மனிதம் வேண்டும் !

இயற்கை வாழ்க

ஆக்கம்: மீ.மணிகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக