புதன், 3 செப்டம்பர், 2014

யானோ வணிகன்

கற்பனைச்சுருளில்
படம்பிடித்தேன்
காகிதப் பக்கத்தில்
திரையுமிட்டேன்

...விற்பனை கூவியும்
...வேகமில்லை
...வீங்கிக்கிடக்குது
...வீட்டுகுள்ளே...!

உற்சவ மூர்த்தியை
உருவமைத்தேன்
ஊர்வலம் போய்வரத்
தேரமைத்தேன்

...ஊருக்குச் சொல்லியும்
...ஓசையில்லை
...உறங்கிக் கிடக்குது
...ஓலைக்குள்ளே...!

பொய்யும் புரட்டும்
போகும் பாதையில்
பூவும் பொன்னுமே
மூடிக்கிடக்குது

...புல்லர் அறிந்திட
...வில்லையெனிலோ
...போகட்டுமே ஒரு
...தோல்வி இல்லை...!

by M.Manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக