சனி, 29 மார்ச், 2014

எழுதவொரு வார்தையில்ல ... M.Manikandan

தொட்டபெட்டா அட்டகட்டி
    தொட்டுத் தின்ன வெல்லக்கட்டி
பொட்டு வச்சுக் கிட்ட வந்தா
    பட்டுச்சேல ஒண்ணக்கட்டி

மங்கை இந்த சொக்கியிண்ணு
    மங்கலமாச் சொன்னாங்க
அங்கேயே கரைஞ்சு போனேன்
    அங்கமெங்கும் ஆசையோட

சங்கு நெத்தி காந்தமாச்சு
    தங்கம் வெள்ளி தள்ளிப் போச்சு
திங்கள் வெள்ளி நாளையேண்ணி
    அங்க இங்க ஓடியாச்சு

வாச மாலை கட்டிப்போட்டு
    மாசி மாசம் பூசை போட்டு
ஆசி கேட்டு சாமிக்கிட்ட
    பேசி வரம் வாங்கியாச்சு

ஆத்துப் பக்கம் காத்திருக்க
    காத்து வர வேர்த்திருக்க
ராத்திரிக்குப் பூத்திரிய
    ஏத்திவச்சுப் பாத்திருக்க

இந்த சுகம் போலவொரு
    சொந்த சுகம் வேற இல்ல
எந்த நாளும் பொத்திவைக்க
    எழுதவொரு வார்தையில்ல !


Written by M.Manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக