ஞாயிறு, 30 மார்ச், 2014

நானும் நீயும் மீதமினி

என்னை உன்னை நம்பித்தான்
எல்லாம் இங்கே நடக்குதடா.
எனக்கும் உனக்கும் தேவையெனில்
எல்லாம் மறைந்தே போகுதடா !

ஐந்தே மாதங்கள் நமை நாடும்
ஐந்தாம் அறிவுத் தெருக்கூத்து.
ஐந்து ஆண்டுகள் நாம் தேட‌
அழிந்தே மறையும் வெறுங்காத்து !

விட‌லைக ளில்லை நாமுமினி
வெறுங்கை முழத்தை நம்புதற்கு,
வேட்டை களாடி உரிமைபெற‌
வேங்கை என்பதை நிலைனிறுத்து !

மயக்க நிலையில் நாமில்லை
மாயா ஜாலம் பார்த்திருக்க‌,
வியற்க்க உழைக்கும் மாந்தர் நாம் !
விடியல் கொடுக்கும் வெளிச்சம் நாம் !

இனியொரு காந்தி வரமாட்டார்
இன்னொரு சுதந்திரம் பெறுதற்கு,
மற்றொரு பாரதி வரமாட்டார்
மறுபடி புரட்ச்சி பாடுதற்கு.

உண்மை எங்கும் நிலைப்பதற்கு
உரிமை என்றும் கிடைப்பதற்கு
நானும் நீயும் மீதமினி
நல்லொரு தீர்ப்பை வழங்குதற்கு !


By M.Manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக