ஆழியிலே முத்தெடுக்க
ஆசையுடன் நான்விரைந்தேன்
ஆர்ப்பரிக்கும்
அலைகளுடன்
அனுதினமும் உருக்குலைந்தேன்
நாழிகைகள் நாட்களாக
நாட்களுமே மாதமாக
நாற்புறமும் தேடுகிறேன்
நடந்துசெல்லப் பாதையில்லை
நீந்துவது(உ) பாயமதை
நேசித்துக் கற்கவில்லை
நீர்முகந்து வழிசமைக்க
நீலக்கடல் விடுவதில்லை
காய்ச்சீரில் கவியெழுதி
கவலைதனை மறந்திடவோ
கார்திகேயன் அருளையெண்ணி
காலமிதைக் கடந்திடவோ
--மீ.மணிகண்டன்
06-May-15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக