செவ்வாய், 29 ஜூலை, 2014

இமையே ... M.Manikandan

இமையே,
மூடித்திறப்பதை மறந்துவிடு
முன்னால் நிர்ப்பது
என்னவள்...!

by M.Manikandan

இது தான் காதலா ... M.Manikandan

காற்றையும் பூவையும்
... நேசிக்கக் கற்றேன்
கடலையும் வானையும்
... வாசிக்கக் கற்றேன்
கவிதை வரிகளை
... யோசிக்கக் கற்றேன்
காரிகை என்னிடம்
... பேசிய தாலே !

by M.Manikandan

வியாழன், 17 ஜூலை, 2014

பூக்களோடு ஒரு கைக்குலுக்கல்-சர்நா கவிதை வாசிப்புப் போட்டி ... M.Manikandan

Title given by eluthu.com for a competition

காரிருள் நீக்க வரும்
கதிரவனின் பூக்கதிரை
காதலிக்க வேண்டுமென
கண் விழித்த காலமது... 10

செல்லக் குஞ்சுகளும்
சிணுங்கிக் கொஞ்சலிட
சிறகடித்துக் குருவிகளும்
இரை தேடிப் பறந்ததென்ன... 19

மெல்லப் பனி முத்தும்
மேனி நனைத் திறங்க
புல்லும் குளித்து நிதம்
புதிதாய்ச் சிரித்ததென்னெ... 30

அறம் செய விரும்பென
அன்றைய தேர்வுக்காய்
அதிகாலை மனனிக்கும்
மழலைக் குரலென்ன... 39

நீர் சொட்டும் மயிர் துவட்டி
நீள் கூந்தல் துண்டு டுத்தி
தலை வாசல் தனைப் பெறுக்கி
தண்ணீர் தெளித்தங்கெ
தாமரைக் கோலமிடும்
தாரகையர் கோலமென்ன... 57

ஓடையில் நீச்சலிட
ஓடி வந்து விழுவதென்ன
ஓரிருவர் சத்தமிட
உதட்டை நான் கடித்ததென்ன... 66

இத்தனை சுகங்களையும்
இன்று மீண்டும் தேடுகிறேன்
இருக்கும் இடம் கண்டு
எவரேனும் சொல்வீரோ... 76

புரியாதவன் புலம்புகிறேன்
என்றுவிட்டுப் போவீரோ.... 80

அழுக்குப் பணம் சுமக்க
அழகனைத்தும் தொலைத்துவிட்டேன்
புழுத்தேடிப் புல் மறந்து
புரியாமல் புறப்பட்டேன் 90

நினைவுப் பூக்களுடன்
கை குலுக்கிக் கிடக்கின்றேன்
நிச்சயம் பூவுலகம்
நிசத்தை திருப்பு மென்று. 100

by M.Manikandan

பிரபலமான இடுகைகள்