செவ்வாய், 10 மார்ச், 2015

மனித மந்தையில் தொலைந்த மந்திகள் ... M.Manikandan

அந்த மூவரையும்
காணவில்லையே

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதாம்
விரல் பதிவுகளில்
பள்ளிக்கூடங்களுக்குள்ளேயே
போர்வைகள் விலகுகின்றன

மொழிச் சுதந்திரம்
முதிர்ந்து விட்டதாம்
மூச்சிரைக்க முழங்கப் படுகிறது
முனகல்ச்சத்ததின் பரிணாமங்கள்
முளைக்கட்டுக் கூடங்களிலேயே

கேள்வி ஞானம்
கிளைத்து விட்டதாம்
சேர்க்கை சரிதங்கள்
செதாரமறக் கேட்டு ரசிக்கப்படுகிறது
எழுத்தறிவுச் சாலையிலேயே

வயது முதிர்ந்ததோ
வறுமை முறித்ததோ 
அழத் தோன்றுகிறது 
அழகு மந்திகளைத்
தேடித் தாருங்களேன் 

by M.Manikandan

11-Mar-15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக