செவ்வாய், 9 ஜூன், 2015

வாழ்க வளமுடன்

வயதொன்று கூட்டியது
வாசமண வாழ்வின்று
தந்திடவே பலவெற்றி
தாண்டியது பன்னிரெண்டு

பகல்காணும் பொழுதொருவர்
படுத்துறங்கும் இரவொருவர்
இன்பமான திருமணநாள்
இதுபோலே யார்பெறுவார்

பொறுத்தாளும் புத்திகொண்டு  
புதுநாட்கள் தனைநோக்கும்
மகத்தான இருவுள்ளம்
மறக்காமல் தவமிருக்கும்

வாழ்த்தொன்று நலம்சேர்த்து
வளமோடு வாழ்ந்துயர
மின்னஞ்சல் எனும்பெயரால்
மிதக்கவிட்டேன் உனைச்சேர

குறையின்றி வந்ததெனக்
குறுஞ்செய்தி அனுப்பிடடி
இமையிரண்டும் உரசாமல்
இரண்டாகக் கிறங்குதடி


மீ.மணிகண்டன்
வாழ்க வளமுடன்

2 கருத்துகள்:

  1. மனைவியைப் பிரிந்து வெளிநாட்டில் வாழும் கணவன், தங்கள் திருமண நாளில் எழுதிய மின்னஞ்சல் கடிதம் இது. அடுத்த திருமண ஆண்டு நிறைவுக்குள் ஒன்று சேர்ந்தார்களா அவர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி!
      அதன் பின் மூன்று திருமண ஆண்டுகள் கடந்தபின்தான் இணைய நேர்ந்தது!

      நீக்கு