வயதொன்று கூட்டியது
வாசமண வாழ்வின்று
தந்திடவே பலவெற்றி
தாண்டியது பன்னிரெண்டு
பகல்காணும் பொழுதொருவர்
படுத்துறங்கும் இரவொருவர்
இன்பமான திருமணநாள்
இதுபோலே யார்பெறுவார்
பொறுத்தாளும் புத்திகொண்டு
புதுநாட்கள் தனைநோக்கும்
மகத்தான இருவுள்ளம்
மறக்காமல் தவமிருக்கும்
வாழ்த்தொன்று நலம்சேர்த்து
வளமோடு வாழ்ந்துயர
மின்னஞ்சல் எனும்பெயரால்
மிதக்கவிட்டேன் உனைச்சேர
குறையின்றி வந்ததெனக்
குறுஞ்செய்தி அனுப்பிடடி
இமையிரண்டும் உரசாமல்
இரண்டாகக் கிறங்குதடி
மீ.மணிகண்டன்
வாழ்க வளமுடன்
வாசமண வாழ்வின்று
தந்திடவே பலவெற்றி
தாண்டியது பன்னிரெண்டு
பகல்காணும் பொழுதொருவர்
படுத்துறங்கும் இரவொருவர்
இன்பமான திருமணநாள்
இதுபோலே யார்பெறுவார்
பொறுத்தாளும் புத்திகொண்டு
புதுநாட்கள் தனைநோக்கும்
மகத்தான இருவுள்ளம்
மறக்காமல் தவமிருக்கும்
வாழ்த்தொன்று நலம்சேர்த்து
வளமோடு வாழ்ந்துயர
மின்னஞ்சல் எனும்பெயரால்
மிதக்கவிட்டேன் உனைச்சேர
குறையின்றி வந்ததெனக்
குறுஞ்செய்தி அனுப்பிடடி
இமையிரண்டும் உரசாமல்
இரண்டாகக் கிறங்குதடி
மீ.மணிகண்டன்
வாழ்க வளமுடன்
மனைவியைப் பிரிந்து வெளிநாட்டில் வாழும் கணவன், தங்கள் திருமண நாளில் எழுதிய மின்னஞ்சல் கடிதம் இது. அடுத்த திருமண ஆண்டு நிறைவுக்குள் ஒன்று சேர்ந்தார்களா அவர்கள்?
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஅதன் பின் மூன்று திருமண ஆண்டுகள் கடந்தபின்தான் இணைய நேர்ந்தது!