சிரிக்காத சிலையொன்றில்
செதுக்கியவர் குறைகாண்பார்
பழுக்காத காயொன்றில்
பறித்தவரின் பிழைகாண்பார்
உயராத பயிரொன்றால்
உழுதவரைப் பழிசொல்வார்
இனிக்காத படைப்பொன்றை
எழுதியவர் தவறென்பார்
ஒருகல்லும் பிடியாமல்
ஓங்கவில்லை சுவரென்பார்
மருந்தொன்றும் காணாமல்
மாறாத பிணியென்பார்.
சலிக்காமல் புறம்பேசி
சருகாலே சரந்தொடுப்பார்
வலிக்காத நோயதனை
வருந்தாமல் உட்கொள்வார்.
உடன்பெருகும் நாவார்த்தை
உவர்ப்பில்லை உமிழுவதால்
கடவுள்தான் கருச்சிதையும்
கவலையென்ன அவர்க்கதனால்.
by M.Manikandan
by M.Manikandan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக