வெள்ளி, 26 டிசம்பர், 2014

நாளை அது இனிப்பு ... M.Manikandan

இன்றைக்குப் போதுமென
இன்னுமுள்ள மீதமதை
நாளைக்காய் வேண்டுமென
நானிலத்தார் இருத்துகிறார்   

இன்றைக்கே இல்லாதோர்
இன்னுமிங்கு இருக்கின்றார்
நாளையது வரட்டுமென
நாளதனைப் பார்த்திருப்பார்

இருவருக்கும் நாளையென்று
இருக்கிறது நம்பிக்கை
இதுமட்டும் இல்லையெனில்
இனிப்பேது இருப்பதனில்

by M.Manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக