புதன், 24 டிசம்பர், 2014

கோணல் வரிசை ... M.Manikandan

வானை வாசலென்றும்
வையத்தை வானமென்றும் ...

குப்புறப் படுத்து
குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன்
கோணல் வரிசைப் புள்ளிகளை

எதைத் தொட்டேன்
எதை விட்டேன்
எண்ணிக்கை விட்டுப்போக
இன்னும் இன்னும் ...
எத்தனையோ முறை ...

வீதி பெருக்கி
வெண்ணொளி தெளித்தும்
தொகுத்த கணக்கு
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது
மூடிய திரைக்குள்
முடித்திடும் முயற்ச்சியில்.

திரை விலகும்
திரும்பவும் படரும்
திருத்தாத வரிசை

கள்ளக் கணக்கென்று
கடிந்துகொண்டுமிருக்கும்
கருவரியாத மாயை
மீண்டும்
குப்புறப் படுத்துக் கொண்டு !


by M.Manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக