வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

உறங்கும் சுவைக்கட்டி ... M.Manikandan


சிந்தனையும் மொழியும்
கலவிக்க
எண்ணத்தில் கருவானவள் நான் !

கருவுற்ற சிறு பொழுதுகளில்
கற்பனையால் வளர்க்கப்படும்
சிசு நான் !

எண்ணம் புடைக்க வளர்ந்து
கை விரல் மருத்துவத்தில்
மைக்கருவி ஆயுதத்தால்
பிரசவிக்கப்பட்டு
காகிதத் தொட்டிலில்
தவழ விடப்பட்டது என் பிறப்பு !

அங்கமெங்கும் அடுக்கப்பட்ட
அலங்கார வார்த்தைகளின்
அணிவகுப்பு என் அழகு !

இலக்கணத் தெளிவுகொண்டு
எல்லோரையும் வியக்க வைக்கும்
அறிவு எனது !

எதுகை மோனையோடு
யாப்பு பூசிய என்னை
எடுத்துக் கொஞ்சுபவருக்கு
என்னால் நிழல் தர இயலும் !

இங்கே என்னைப்போல்
நாகரீகம், பொதுவுடைமை
அன்பு, அறிவு,
ஒழுக்கம், உயர்வு என
இன்னும் இன்னும் எத்தனையோ
எங்கள் தோழமைகள் !

எம்மைப் பிரசிவக்க
மும்முரமாக இயங்குவோர்
ஏனோ எடுத்துக் கொஞ்ச
முன் வருவதில்லை.

இப்படித்தான்
பெருக்கிக் கிடக்கிறோம்
எழுதப்பட்ட அனாதைகளாய் !

By M.Manikandan
28-Feb-15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக