மழையின் தாகம் ... மீ.மணிகண்டன் |
மழையின் தாகம்
சொட்டுச் சொட்டாய்
சோலையில் சாரல்
சோ வேனும் சத்தம்
அவைகளின் கூவல்
கரும் புகை மண்டலக்
கருவினில் உதயம்
கருப்பு கரைந்த
கண்ணாடித் துளியும்
ஒன்றன் பின் ஒன்றாய்
தொடர்ந்த பிறப்பு
வரிசை மாறா
வாலிப வனப்பு
மேக வாழ்வின் ரகசியத்தை
புள்ளிப் புள்ளிப் பந்துகளாய்
பூவின் இதழில் உருண்டெழுதும்
புதுமைக் காதல் கதை கதையாய்
காற்றுப் பாதை நெடுகிலுமே
கவிதை பாடி வந்த துளி
ஆற்றைத் தேடி அலைந்தழுது
விழுந்த இடமோ சாலை வெளி!
மீ.மணிகண்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக