நாளைய தமிழும்
தமிழரும் “பொங்கல் கவிதை
போட்டி 2015”
___________________________________________
எழுத்துத் தளத்தில் அறிவித்திருந்த போட்டி ஒன்றில் இரண்டாம் பரிசு வென்ற படைப்பு இது. பரிசீலித்த மதிப்பிற்குரிய நடுவர்கள்:
இன்றைய மகாகவி----
ஈரோடு தமிழன்பன் அய்யா அவர்கள்
யுகபாரதி -
திரைப்பட பாடலாசிரியர்
முனைவர் . பா . ரவிக்குமார் -
(உலக கவிதைப் போட்டியில் முதல் பரிசு வென்றவர்)
விழிகள் நடராஜன்
(எழுத்தாளர்)
___________________________________________
___________________________________________
எழுத்துத் தளத்தில் அறிவித்திருந்த போட்டி ஒன்றில் இரண்டாம் பரிசு வென்ற படைப்பு இது. பரிசீலித்த மதிப்பிற்குரிய நடுவர்கள்:
இன்றைய மகாகவி----
ஈரோடு தமிழன்பன் அய்யா அவர்கள்
யுகபாரதி -
திரைப்பட பாடலாசிரியர்
முனைவர் . பா . ரவிக்குமார் -
(உலக கவிதைப் போட்டியில் முதல் பரிசு வென்றவர்)
விழிகள் நடராஜன்
(எழுத்தாளர்)
___________________________________________
-------------------- படைப்பு --------------------
முத்தமிழே
வரலாற்றில் முந்திய தாகும்
இத்தமிழே
இனியெங்கும் பேசிடக் கூடும் !
சத்துமிக்க
அரசாங்கம் சங்கம மைக்கும்
இத்தரையோர்
இணைந்தேறப் பாலமி ணைக்கும் !
வள்ளலுளப்
பொறியாளர் மென்பொருள் கூட்ட
கள்ளமறக் கணினித்த மிழ்மலர்
பூக்கும் !
வெள்ளையனார்
குடியேற்றத் தேசமென் றாலும்
வள்ளுவனார்
கொடியங்கே பாதைவ குக்கும் !
வங்கிகளில் தமிழெண்ணில்
ஐந்தொகை ஏறும்
பொங்குதமிழ்
சமிக்ஞைக்குப் பூமியி யங்கும் !
இங்கிலாந்து
கொலுக்கூடம் சங்குமு ழங்கும்
தங்கரதம்
தமிழ்த்தாய்க்கு கோவில மைக்கும் !
நாடனைத்தும்
தமிழூறும் பள்ளிக ளாகும்
கூடவாங்கி
லவிருப்பப் பாடமென் றாகும் !
வீடனைத்தும்
குரள்தொட்டே வேளைதொ டங்கும்
மேடைதோறும்
கரகாட்டம் மின்னியி ருக்கும் !
சிந்துசம
வெளியின்னும் தொன்மைப டைத்த
சந்தமொழி
உலகாண்டு ஒற்றுமை காக்கும் !
பந்தமென்றே
பலநாடும் சேர்ந்துவ ணங்க
பைந்தமிழில்
உருவாகும் தேசிய கீதம் !
கொள்கையென
தமிழ்பேசி நாமுமி ருந்தால்
கொள்ளைபோக
இயலாமல் கூடியி ருப்பாள் !
நல்லவிலை
கொடுத்தீட்டும் ஆங்கிலம் தீர
வல்லரசாய்
தமிழென்றும் வையமி ருப்பாள் !
By M.Manikandan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக