ஞாயிறு, 11 ஜனவரி, 2015


நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015”
___________________________________________
எழுத்துத் தளத்தில் அறிவித்திருந்த போட்டி ஒன்றில் இரண்டாம் பரிசு வென்ற படைப்பு இது. பரிசீலித்த மதிப்பிற்குரிய நடுவர்கள்: 

இன்றைய மகாகவி---- 
ஈரோடு தமிழன்பன் அய்யா அவர்கள் 

யுகபாரதி - 
திரைப்பட பாடலாசிரியர் 

முனைவர் . பா . ரவிக்குமார் - 
(உலக கவிதைப் போட்டியில் முதல் பரிசு வென்றவர்) 

விழிகள் நடராஜன் 
(எழுத்தாளர்) 
___________________________________________

-------------------- படைப்பு --------------------

முத்தமிழே வரலாற்றில் முந்திய தாகும்
இத்தமிழே இனியெங்கும் பேசிடக் கூடும் !
சத்துமிக்க அரசாங்கம் சங்கம மைக்கும்
இத்தரையோர் இணைந்தேறப் பாலமி ணைக்கும் !

வள்ளலுளப் பொறியாளர் மென்பொருள் கூட்ட
கள்ளமறக் கணினித்த மிழ்மலர் பூக்கும் !
வெள்ளையனார் குடியேற்றத் தேசமென் றாலும் 
வள்ளுவனார் கொடியங்கே பாதைவ குக்கும் !

வங்கிகளில் தமிழெண்ணில் ஐந்தொகை ஏறும்
பொங்குதமிழ் சமிக்ஞைக்குப் பூமியி யங்கும்  !
இங்கிலாந்து கொலுக்கூடம் சங்குமு ழங்கும்
தங்கரதம் தமிழ்த்தாய்க்கு கோவில மைக்கும் !

நாடனைத்தும் தமிழூறும் பள்ளிக ளாகும்
கூடவாங்கி லவிருப்பப் பாடமென் றாகும் !
வீடனைத்தும் குரள்தொட்டே வேளைதொ டங்கும்
மேடைதோறும் கரகாட்டம் மின்னியி ருக்கும் !

சிந்துசம வெளியின்னும் தொன்மைப டைத்த
சந்தமொழி உலகாண்டு ஒற்றுமை காக்கும் !
பந்தமென்றே பலநாடும் சேர்ந்துவ ணங்க 
பைந்தமிழில் உருவாகும் தேசிய கீதம் !

கொள்கையென தமிழ்பேசி நாமுமி ருந்தால்
கொள்ளைபோக இயலாமல் கூடியி ருப்பாள் !
நல்லவிலை கொடுத்தீட்டும் ஆங்கிலம் தீர
வல்லரசாய் தமிழென்றும் வையமி ருப்பாள் !

By M.Manikandan




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக