வியாழன், 1 ஜனவரி, 2015

நல்வரவு 2015 ... M.Manikandan

இரு விகற்ப நேரிசை வெண்பா

பல்வளம் வேண்டிடும் மானிட ருய்திட
நெல்நிலம் இல்லம் வசதியுடன் – நல்லொளி
மாதவம் பேறெனக் கூறிட வந்திடு
மேதகு வாங்கிலவாண் டே

பம்பரமாய்ச் சுற்றிநி தம்பலர் நொந்திட
மும்முரமா யீட்டும் பெரும்பணம் – நிம்மதிக்கு
சாதக மாகா தெனுமறி வூட்டிடு
மேதகு வாங்கிலவாண் டே

மூத்தோர் மதியிற் சிறந்தோர்க் குநெல்பல 
பூத்த நிலத்திலு ரிஞ்சிட - மீத்தேனை 
பாதக மாமென புத்தியி லூட்டிடு
மேதகு வாங்கிலவாண் டே 


by M.Manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக