இரு விகற்ப
நேரிசை வெண்பா
பல்வளம் வேண்டிடும் மானிட ருய்திட
நெல்நிலம் இல்லம் வசதியுடன் – நல்லொளி
மாதவம் பேறெனக் கூறிட வந்திடு
மேதகு வாங்கிலவாண் டே
பம்பரமாய்ச் சுற்றிநி தம்பலர் நொந்திட
மும்முரமா யீட்டும் பெரும்பணம் – நிம்மதிக்கு
சாதக மாகா தெனுமறி வூட்டிடு
மேதகு வாங்கிலவாண் டே
மூத்தோர் மதியிற் சிறந்தோர்க் குநெல்பல
பூத்த நிலத்திலு ரிஞ்சிட - மீத்தேனை
பாதக மாமென புத்தியி லூட்டிடு
மேதகு வாங்கிலவாண் டே
by M.Manikandan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக