புதன், 7 ஜனவரி, 2015

சாதி ஒழி மதம் அழி சாதி... M.Manikandan


சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதை போட்டி 2015” (eluthu.com)
--------------------------------------------------------------------------------------------------------------------
அளந்து ஆசான் ஆக்கிய வொன்றை 
  விளங்கி வந்து சூத்திரம் வேறாய்ப்
பிளந்து ஈயப் பின்னவர் போற்றி
  வளர்ந்த தன்றோ பாத்திர மென்று !

குடிசைக் குள்ளே கொட்டிடு மற்கன்
  வடிவம் நூறு வட்டமும் கூரும்
படிக்கச் சொன்னார் பட்டமு மீன்றார்
  கிடுகை நீக்கும் திட்டம தில்லை !

பிழையாய் வேய்ந்த கூரையி னுள்ளே
  பிழைக்க வந்து, பிள்ளைக ளுக்கும்
மழைநீ ரூற்றம் மாற்றிட வொண்ணா
  வழக்க மென்றார் பின்னலி லோட்டை !

இரண்டு வர்ணக் கொம்புக ளோடே
  இரண்டு காளை வண்டியு மோடி
இரண்டு வொற்றைப் பாதைக ளாகி
  இரண்டும் சேரும் வோர்நிலை யாடி !

முளைத்த தண்டு வொன்றெனக் கண்டு
  கிளைத்த கப்பைக் கிள்ளிட நன்றே !
விளையும் கன்றைத் தள்ளுவ தெல்லாம் 
  வளர்ந்து வாழை உய்திட வென்றே !

ஒருநூல் சேலை ஓவியம் நூறு !
  அருகாய் வேர்கள் ஆணிய தொன்று !
பருகத் தண்ணீர் பன்நிலை நீர்க்கு !
  விருப்பம் வீரம் மானுட வேர்க்கு !

* மீ.மணிகண்டன்
* 07-Jan-14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக