சாதி ஒழி மதம்
அழி சாதி “பொங்கல் கவிதை போட்டி 2015” (eluthu.com)
--------------------------------------------------------------------------------------------------------------------
அளந்து ஆசான்
ஆக்கிய வொன்றை
விளங்கி வந்து சூத்திரம் வேறாய்ப்
பிளந்து ஈயப்
பின்னவர் போற்றி
வளர்ந்த தன்றோ பாத்திர மென்று !
குடிசைக் குள்ளே
கொட்டிடு மற்கன்
வடிவம் நூறு வட்டமும் கூரும்
படிக்கச்
சொன்னார் பட்டமு மீன்றார்
கிடுகை நீக்கும் திட்டம தில்லை !
பிழையாய் வேய்ந்த
கூரையி னுள்ளே
பிழைக்க வந்து, பிள்ளைக ளுக்கும்
மழைநீ ரூற்றம்
மாற்றிட வொண்ணா
வழக்க மென்றார் பின்னலி லோட்டை !
இரண்டு வர்ணக்
கொம்புக ளோடே
இரண்டு காளை வண்டியு மோடி
இரண்டு வொற்றைப்
பாதைக ளாகி
இரண்டும் சேரும் வோர்நிலை யாடி !
முளைத்த தண்டு
வொன்றெனக் கண்டு
கிளைத்த கப்பைக் கிள்ளிட நன்றே !
விளையும் கன்றைத்
தள்ளுவ தெல்லாம்
வளர்ந்து வாழை உய்திட வென்றே !
ஒருநூல் சேலை
ஓவியம் நூறு !
அருகாய் வேர்கள் ஆணிய தொன்று !
பருகத் தண்ணீர்
பன்நிலை நீர்க்கு !
விருப்பம் வீரம் மானுட வேர்க்கு !
* மீ.மணிகண்டன்
* 07-Jan-14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக